August 25, 2026, 5:59 pm
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.8.2026) மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி எம். வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி திருமதி ர. மோனிகா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி எஸ். காளீஸ்வரி உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.